Mnadu News

சிறிலங்கா இராணுவத்திற்கு உடனடி பயணத்தடை – கனடா எடுத்துள்ள முதல் நடவடிக்கை!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த வியாழன் அன்று நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் உறுப்பு நாடுகளினால் சிறிலங்கா இராணுவ வீரர்களுக்கு உடனடி பயணத் தடை விதிக்கும்.

கொழும்பு ஆங்கில ஊடக தகவலின்படி, கனடா முதலில் இதைச் செயற்படுத்தும், குறைந்தது மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளும் கனடாவின் தடையை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஆதரிப்பதை” இலக்காகக் கொண்ட ஒரு தீர்மானத்தை ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை கடந்த வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டது.இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட 20 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இருபது நாடுகள் வாக்களிக்கவில்லை, ஏழு நாடுகள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன, இலங்கைக்கு ஆதரவாக இருந்தன.

முந்தைய தீர்மானங்களைப் போலன்றி, வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதனால் ஏற்படும் மனித உரிமை மீறல்கள் ஆகியவை கணிசமான கவனத்தைப் பெற்றுள்ளன.இது ஊழலை நிவர்த்தி செய்வதோடு, அதை எதிர்த்து நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றியதில் கலந்து கொண்ட போராட்டகாரர்களை நிர்வாகம் எவ்வாறு கையாண்டது என்றும் அது விமர்சித்துள்ளது. மனித உரிமை மீறல்களில் விளைந்ததாகக் கூறப்படும் பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் புதிய தீர்மானத்தில் எழுப்பப்பட்டுள்ள வேறு ஏதேனும் பிரச்சினைகளை விசாரிக்க ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அனுசரணையின் கீழ் புதிய செயலகம் நிறுவப்படும்.

ஆசியா (கொரியாவைத் தவிர) மற்றும் ஆபிரிக்கா (மலாவியைத் தவிர) தீர்மானத்தின் மீது வாக்களிக்கவில்லை அல்லது தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 

Share this post with your friends