இந்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் ,ஐபிஎல் போட்டிக்கான அட்டவணைகளை வெளியிடப்பட்டுள்ளது . ஏப்ரல் 23 ல் நடைபெறும் ஐபிஎல் போட்டியின் முதற்கட்ட போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் பலபரிட்சை மேற்கொண்டு வருகின்றனர் . சமீபத்தில் வெளியான தகவலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி எங்கிடி பங்கேற்கமாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவருக்கு தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மேலும் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள அனைத்து போட்டிகளிலும் இவர் கலந்துகொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்களிடையே மத்தியில் பெரும் ஷாக் எழுந்துள்ளது .