கடந்த சில தினங்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது என்றும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டுகிறது என புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/11/health-2-2-1024x683.jpg)
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை சீனாவின் உள்ளூர் நகரங்களில் 10,729 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஆகியுள்ளது. இதன் மூலம் கொரோனா நான்காம் அலை ஏற்பட்டுள்ளதா என்கிற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/11/225139-china-1.jpg)
இதனால் சீனாவின் தலைநகர் பீஜிங் நகர பூங்காக்களை மூடியுள்ளது மற்றும் பிற கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, ஏனென்றால் அங்கு தான் பாதிப்பு உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் பல பள்ளிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க துவங்கி உள்ளனர். அதோடு, சுகாதாரத்துறை பல்வேறு அறிவிப்புகளை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.