Mnadu News

சீனாவில் 15 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு! அரசு நடவடிக்கைகள் தீவிரம்!

சீனாவில் துவங்கிய கொரோனா தொற்றின் முதல் பாதிப்பு மூன்று வருடங்கள் ஆகியும் இன்னும் அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் அங்கு 11,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு எண்ணிக்கை ஆகும். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை சீனாவின் உள்ளூர் நகரங்களில் 14,878 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 13,167 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இரண்டு நாட்களில் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,71,968 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends