Mnadu News

சீனாவுடனான வணிகத்தை ஏன் நிறுத்தவில்லை: கேஜரிவால் கேள்வி.

எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவத்துக்கிடையே மோதல் ஏற்பட்ட சில நாட்கள் சென்ற நிலையில், சீனாவுடனான வர்த்தகத்தை இந்தியா இன்னும் ஏன் நிறுத்தவில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது, சீனாவுடனான வணிகத்தை நாம் ஏன் நிறுத்தக்கூடாது? சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. சீனாவுடனான வர்த்தகத்தை நிறுத்துவதன் மூலம், நாம் சீனாவுக்கு பாடம் புகட்டலாம். அதே வேளையில், இந்தியாவில் வேலை வாய்ப்புகள் உயரும் எனக் குறிப்பிட்டார்.

Share this post with your friends