நடிகர், நடிகைகள் சிலர் படம் நடிக்கும் போதே அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகி காதலித்து பின்னர்அது திருமணத்தில் முடிவடைகிறது . அந்த வரிசையில் அஜித் – ஷாலினி , சங்கீதா – க்ரிஷ் , மணிரத்தினம் – சுகாசினி ,பாபி சிம்ஹா – ரேஸ்மி ,சினேகா -ப்ரஸன்னா இன்னும் பல பிரபலங்கள் உள்ளன .
திரையில் ஒன்றாக தோன்றிய நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்ட பின்னர் இருவரும் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள் என்றாலும் திருமணத்திற்கு பின்னர் நடிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கின்றனர் . அப்படியே திருமணம் முடிந்து நடிகைகள் நடித்தாலும் மீண்டும் இவர்கள் ஜோடியாக திரையில் தோன்றுவதில்லை .
பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்த சூர்யா – ஜோதிகாவின் காதல் வாழ்க்கை தொடங்கியது. இவர்கள் நடித்த காக்க -காக்க படத்தில் தான் இருவரின் காதல் கெமிஸ்ட்ரி மேலும் அதிகமானது . கௌதம் மேனன் இயக்கம் செய்த காக்க -காக்க திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது .சூர்யா தற்போது தயாரிப்பாளராகவும் .
மேலும் தன் மனைவியான ஜோதிகா தற்போது சமூக நலத்துடனும் ,பெண்களுக்கு ஆதரவு தரக்கூடிய கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார் .இவர் திருமணமாகிய பின்னர் 36 வயதினிலே ,மகளிர் மட்டும், நாச்சியார், செக்கசிவந்த வானம், காற்றின் மொழி போன்ற படங்களில் நடித்துள்ளார் . ஜோதிகாவின் சில படங்களுக்கு சூர்யாவே தயாரித்துள்ளார் . இந்த நிலையில் ரசிகர்களுக்கு சூர்யா -ஜோதிகா காம்போவை மீண்டும் எப்பொழுது பாப்போம் என்று கேட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக காக்க -காக்க படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர் .
காக்க -காக்க 2 படத்தை கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார் . அப்படியே அஜித் ஷாலினி காம்போவில் ஒரு படம் குடுக்க மாட்டாங்களா என தல ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.