Mnadu News

சூர்யா – ஜோதிகா இணைந்து நடிக்கும் புதிய படம் அப்டேட்

நடிகர்,  நடிகைகள்  சிலர் படம் நடிக்கும் போதே    அவர்களுக்குள்  கெமிஸ்ட்ரி  ஒர்க் அவுட்டாகி காதலித்து பின்னர்அது  திருமணத்தில்  முடிவடைகிறது . அந்த வரிசையில்  அஜித் – ஷாலினி , சங்கீதா – க்ரிஷ் , மணிரத்தினம் – சுகாசினி ,பாபி சிம்ஹா – ரேஸ்மி  ,சினேகா -ப்ரஸன்னா இன்னும்   பல பிரபலங்கள்  உள்ளன .

திரையில் ஒன்றாக தோன்றிய நடிகர்  நடிகைகள்   திருமணம் செய்து கொண்ட பின்னர்   இருவரும்  ஒரே துறையைச்  சேர்ந்தவர்கள்  என்றாலும்  திருமணத்திற்கு  பின்னர் நடிப்புக்கு   முற்றுப் புள்ளி   வைக்கின்றனர்  . அப்படியே   திருமணம்  முடிந்து   நடிகைகள்   நடித்தாலும்    மீண்டும்    இவர்கள்   ஜோடியாக  திரையில்  தோன்றுவதில்லை .

பூவெல்லாம்  கேட்டுப்பார்  என்ற படத்தில் நடித்த   சூர்யா – ஜோதிகாவின் காதல் வாழ்க்கை தொடங்கியது. இவர்கள்  நடித்த  காக்க -காக்க  படத்தில்    தான் இருவரின்  காதல்  கெமிஸ்ட்ரி   மேலும் அதிகமானது .  கௌதம் மேனன்  இயக்கம்  செய்த காக்க -காக்க  திரைப்படம்    பெரிய  அளவில் வெற்றி பெற்றது .சூர்யா தற்போது தயாரிப்பாளராகவும் .

மேலும் தன் மனைவியான ஜோதிகா  தற்போது சமூக  நலத்துடனும் ,பெண்களுக்கு  ஆதரவு தரக்கூடிய  கதாபாத்திரத்திலேயே  நடித்து வருகிறார் .இவர் திருமணமாகிய பின்னர் 36  வயதினிலே ,மகளிர் மட்டும், நாச்சியார், செக்கசிவந்த வானம், காற்றின் மொழி போன்ற  படங்களில்  நடித்துள்ளார் .   ஜோதிகாவின்  சில படங்களுக்கு சூர்யாவே  தயாரித்துள்ளார் . இந்த நிலையில் ரசிகர்களுக்கு  சூர்யா -ஜோதிகா  காம்போவை  மீண்டும் எப்பொழுது பாப்போம் என்று கேட்டவர்களுக்கு   மகிழ்ச்சியான  செய்தியாக  காக்க -காக்க  படத்தின்  இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர் .

காக்க -காக்க 2 படத்தை  கௌதம் மேனன்  இயக்கத்தில்  அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக  தெரிவித்துள்ளார் . அப்படியே அஜித் ஷாலினி காம்போவில் ஒரு படம் குடுக்க மாட்டாங்களா என தல ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

Share this post with your friends