Mnadu News

சூளூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? – தமிழக தேர்தல் ஆணையர்

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் அதிமுகவிற்கு வாக்களித்தால் 1500 ரூபாய் பணம் அளிக்கப்படும் என ஜெயக்குமார் பேட்டியளித்திருந்தார்.

திமுக சார்பில் இதை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அமைச்சர் ஜெயக்குமார் மீதான திமுக உறுப்பினர்கள் அளித்த மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தகுந்த விளக்கங்கள் கேட்டப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

சூளூர் சட்டமன்ற உறுப்பினர் மாரடைப்பால் இறந்துள்ளார். அந்தத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த தலைமை தேர்தல் அதிகாரி தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. வரும் பட்சத்தில் சூளுர் தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Share this post with your friends