Mnadu News

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரிழப்பு

சிங்கப்பூருக்கு செங்கடல் வழியாக சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து நேற்று அதிகாலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து உதவிகேட்டு சரக்கு கப்பல் கேப்டன் அமெரிக்க கடற்படைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களுடன் அமெரிக்க போர் கப்பல் விரைந்துள்ளது. அமெரிக்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் விரைந்து வந்து, சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்கின.

அமெரிக்க ஹெலிகாப்டர்கள் நடத்திய தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பயணித்த 3 படகுகள் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டன. அதேவேளை, ஹெலிகாப்டர் தாக்குதலில் இருந்து தப்பிய ஒரு படகில் சில ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தப்பிச்சென்றனர். இந்த சம்பவத்தால் செங்கடலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Share this post with your friends