Mnadu News

செங்கல்பட்டில் மருத்துவ தம்பதியை மிரட்டி துணிகர கொள்ளை! மர்ம நபர்கள் கைவரிசை!நடந்தது என்ன? 

செங்கல்பட்டு, அண்ணாநகரை சேர்ந்தவர் ஹரிகுமார்- மாலினி இணை. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு வேலை முடிந்து இத்தம்பதி வீடு திரும்பியுள்ளனர். பின்னர் இரவு  சாப்பிட்டு வீட்டின் கதவுகளை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, அறைக்குள் இருவரும் உறங்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு வீட்டின் உள்பக்கமாக பூட்டியிருந்த முன்பக்க கதவை உடைத்து, டாக்டர் தம்பதியின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்துள்ளனர்.

இந்த நிலையில் சத்தம் கேட்கவே இருவரும் சென்று பார்த்துள்ளனர், அதில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பது உறுதியானது. பின்னர் டாக்டர் மாலினிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்து அவரது கழுத்தில் இருந்த 12 சவரன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த  செங்கல்பட்டு நகர போலீசார் அப்பகுதியில்  பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.  மேலும்,  போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து,  மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டில் அரங்கேறிய இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

Share this post with your friends