சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை..!
சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சென்னை; தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இதனைத்தொடர்ந்து நகரில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னையில் நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, சூளைமேடு, கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய கனழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.