Mnadu News

சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை:டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செயும் இயந்திரத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது..இந்நிலையில் தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்வது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதன் விளக்கப்படி, சென்னையில் சோதனை அடிப்படையில் 4 எலைட் மதுபான கடைகளில் பணம் செலுத்தினால் மதுபானம் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரையடுத்து, பணம் செலுத்தி மதுபானத்தை பெற்றுக் கொள்ளும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள டாஸ்மாக் நிர்வாகம், 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இயந்திரத்தில் இருந்து மதுபானம் பெற அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளது.

Share this post with your friends