Mnadu News

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமை அலுவலகத்துக்கு சீல்

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா , மதக் கலவரத்தைத் தூண்டுவதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து , பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதிதத்து. இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு சீல் வைக்கும் பணி நடந்து வருகிறது.

Share this post with your friends