சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளில் 21 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போடவில்லை என மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 27 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். சென்னையில் 21 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. சென்னையில் அதிகபட்சமாக ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் 66.75 சதவீதமும், குறைந்தபட்சமாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் 52.04 சதவீதமும் பதிவாகியுள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடும்போது சென்னையில் அனைத்து இடங்களிலும் 4 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
இடமாற்றம், இறப்பு உள்ளிட்ட காரணங்களால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் நடைபெற்றிருக்கும். இதேபோல, ஒருசில வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து அந்த சமயத்தில் இருந்த அதிகாரியிடம் உரிய விளக்கம் கேட்கப்படும். தொகுதி மாறி குடிபெயரும்போது அதிகாரிகள் நேரடியாக சென்று பார்க்கும்போது ஆட்கள் இல்லையென்றால் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து விடுவார்கள்” என்று அவர் கூறினார்.