Mnadu News

சென்னை அணியின் பந்து வீச்சிற்கு திணறிப்போன கொல்கத்தா அணி

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐ பி எல் தொடரின் 23 ஆவது போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணி மோதிக்கொண்டன . முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது .அதன் பின் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது . இதனால் சுமாரான ஆட்டத்தை தொடக்கத்தில் இருந்தே வெளிப்படுத்தியது .

ஆட்டத்தின் பவர்பிலே ஓவர்களில் கொல்கத்தா அணியின் முக்கிய 4 வீரர்களை இழந்தது . சென்னை அணியின் தீபக் சாஹர் 3 விக்கெட்களையும் ஹர்பஜன் மற்றும் இம்ரான் தாஹிர் அவரவர் பங்கிற்கு தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர் .

கொல்கத்தா அணியின் அதிரடி வீரரான ரசூல் 44 பந்துகளில் அரைசதம் அடித்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார் . இருப்பினும் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களை எடுத்தது.

109 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி எளிதாக அவர்களது 5 ஆவது வெற்றியை பதிவு செய்தது . 17 . 2 ஆவது ஓவரில் 111 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து கொல்கத்தா அணியை சென்னை அணி வீழ்த்தியது .

Share this post with your friends