Mnadu News

சென்னை சூப்பர் கிங்ஸ் அகடமியை துவக்கி வைத்த தல தோனி!

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் சார்பில் சென்னை, துரைப்பாக்கம் மற்றும் சேலம், வாழப்பாடியில் கிரிக்கெட் அகாடமிகள் தொடங்கப்பட்டு அங்கு இளம் வீரர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில் அந்த அகாடமி மேலும் விரிவுப்படுத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.எஸ்.டோனி குளோபல் பள்ளியில் உள்ள மைதானத்தில் சூப்பர் கிங்ஸ் அகாடமி அமைக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அகாடமி பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மைதானத்தில் மொத்தம் 8 ஆடுகளங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பயிற்சி ஆடுகளங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends