Mnadu News

ஜனநாயகத்தின்; கதவுகள் அடைக்கப்படும்போது யாத்திரைதான் ஒரே வழி: ராகுல் காந்தி பேச்சு

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் தமிழகத்தின் கூடலூர் பகுதியில் இருந்து கர்நாடக சென்றுள்ளது. அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி ,நாட்டில் ஜனநாயக முறையிலான அமைப்புகள் நிறைய உள்ளன. நாடாளுமன்றம் மற்றும் ஊடகங்கள் உள்ளன. ஆனால், அவற்றின் கதவுகள் எதிர்க்கட்சிகளுக்கு திறக்கப்படவில்லை. ஊடகங்கள் எங்களது குரலுக்கு கவனம் கொடுக்கவில்லை. அனைத்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. இது போன்ற சூழலில் ஒற்றுமை யாத்திரை மேற்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். எந்த ஒரு சக்தியாலும் இந்த ஒற்றுமை யாத்திரையை தடுத்து நிறுத்த முடியாது என்று பேசினார்.

Share this post with your friends