Mnadu News

ஜம்மு காஷ்மீர் பிரச்சினை சிக்கலானது: மெகபூபா முப்தி

ஜம்மு காஷ்மீர் பிரச்சினை சிக்கலானது என்று முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் பிரச்சினை சிக்கலானது என்று முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார். மெகபூபா முப்தி கூறியிருப்பதாவது:- “ஜம்மு காஷ்மீர் பிரச்சினை சிக்கலான ஒன்று. இங்கு தினமும் என்கவுண்டர்கள் நடைபெறுகிறது. சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளை சரிசெய்வது முக்கியமானதுதான். அதற்கு பாகிஸ்தான் பிரதமர் முதலில் இந்தியா- பாகிஸ்தான் உறவை மேம்படுத்த வேண்டும். பின்னர் ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை சரிசெய்யலாம்” என தெரிவித்துள்ளார்.

Share this post with your friends