Mnadu News

ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சத்யேந்தர் ஜெயின் மனுத் தாக்கல்.

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.கடந்த 2015-16 ஆண்டுகளில் டெல்லி அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் பதவி வகித்தபோது, வருமானத்திற்கு மாறான சொத்து மற்றும் பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்ததது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஏப்ரலில், சத்யேந்தர் ஜெயின் குடும்பம் மற்றும் நிறுவனங்கள் தொடர்புடைய 4 கோடியே 81 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.இதனிடையே சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Share this post with your friends

அரிக்கொம்பன் யானையை மீட்டுத்தாருங்கள்: போராடும் பழங்குடியின மக்கள்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்குட்பட்ட சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பிறந்த அரிக்கொம்பனை, வனத்துறையினர்,...

Read More