ஜார்கண்ட் மாநில அரசின் புதிய ஆள் எடுப்பு கொள்கைக்கு எதிராக ராஞ்சியில் உள்ள மொரபாடி மைதானத்தில் அமைதியான முறையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.பின்னர் அவர்கள் திடீர் என்று முதல் அமைச்சர்; இல்லம் அருகே போராட்டத்தைத் தொடங்கினர்.இந்த நிலையில் போரரட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதையடுத்து அவர்களை களைக்க லேசாக தடியடி நடத்தப்பட்டது.அதோடு சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.இதனிடையே, மாணவர்களின் போராட்டத்தை அடுத்து முதல் அமைச்சர்; இல்லம் மற்றும் தலைமைச் செயலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More