Mnadu News

ஜூன் 5-ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் முர்மு.

சென்னை, கிண்டி பல்நோக்கு அரசு மருத்துவமனையை திறக்கவும்,திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை திறக்கவும் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து முதல் அமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, முதல் அமைச்சரின்; அழைப்பை ஏற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் ஜூன் 5-ஆம் தேதி தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this post with your friends