Mnadu News

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். திசையன்விளை அருகே உள்ள ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு காலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஜெயக்குமார் எரிந்த நிலையில் உடல் கிடைத்த தோட்டத்திலும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Share this post with your friends