Mnadu News

ஜெயலலிதாவை சிறைக்கு தள்ளியது திமுக சட்டத்துறை: அமைச்சர் உதயநிதி பேச்சு.

கோட்டூர்புரத்தில் திமுக சட்டப்பிரிவு சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி,திமுக.,வில் எப்போதும் நம்பர் ஒன் அணி என்றால் அது சட்டத்துறை தான். திமுக.,வின் கடினமான காலங்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. ஜெயலலிதா ஏ1 ஆகவும், அவருடைய நெருங்கிய தோழி சசிகலாவை ஏ2 ஆகவும் கம்பி எண்ண வைத்தது இந்த சட்டத்துறை தான். தற்போது திமுக ஆட்சியில் இல்லாமல் பழனிசாமி ஆட்சியோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ இருந்திருந்தால் தற்போது தமிழ்நாட்டின் பெயரையே மாற்றி இருப்பார்கள் என்று பேசியுள்ளார்.

Share this post with your friends