தற்போது நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பல்வேறு கட்சயினர் தங்களது தொகுதிகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் ,கூட்டணி குறித்த தகவலையும் அறிவித்து வருகின்றனர் .அந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக தங்களது கூட்டணி மற்றும் தொகுதிவாரியான வேட்பாளர் பட்டியலையும் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தலைவரை தினகரன் அவர்கள் எந்த ஒரு கட்சியினரோடு கூட்டணி வைக்கமால் ,ஜெயலலிதா எப்படி எந்த கட்சியினரோடு கூட்டணி வைக்காமல் தேர்தலில் களம் கண்டு இருந்தாரோ அந்த வழியை கடைபிடிக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது . மேலும் ஜெயலலிதா பின்பற்றும் முறைகளில் ஒன்றான நல்ல நாள் ,நேரம் பார்த்து அறிவித்தது போலவே ஐவரும் பின்பற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது . இது குறித்து கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கையில் ஜெயலலிதா சாயலை பின்பற்றுவது தினகரன் என்று பெருமிதமாக கூறியுள்ளனர் .