Mnadu News

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு அறிவிக்கை கடந்த ஜூலை மாதம் 21-இல் வெளியிடப்பட்டது. அதன்படி, முதல்நிலை எழுத்துத் தேர்வானது அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர், நிர்வாகக் காரணங்களுக்காக இந்தத் தேர்வானது வரும்; 19-ஆம் தேதியன்று நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.
அக்டோபர் மாதம் 30-ஆம் தேதியன்று தேவர் ஜெயந்தி விழாவையொட்டி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ,டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான
https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எழுத்துத் தேர்வானது வரும் 19-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் நடைபெற உள்ளது.

Share this post with your friends