Mnadu News

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் முதலிடத்தில் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்.

சிவில் சர்வீஸ் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ள பிரதமர் மோடி,இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து வரும் முதல் சிவில் சர்வீஸ் தினம். அடுத்த 25 ஆண்டுகளில் மிகப் பெரிய இலக்குகளை அடைவதற்கான படியை நாடு எடுத்து வைத்திருக்கிறது.கடந்த 9 ஆண்டுகளில் நல்ல அரசு என்பதன் மீது நாட்டின் ஏழைகளுக்கு மிகப் பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம், டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் உலகின் முதல் நாடாக இந்தியா உள்ளது என்று உரையாற்றி உள்ளார்.

Share this post with your friends