Mnadu News

டெல்லியில் அரங்கேறிய கொடூர கொலை! சிக்கிய காதலன்! நடந்தது என்ன ?

ஒரே நிறுவனம்: 

டெல்லியை சொந்தமாக கொண்டவர அரபித் என்ற 25 வயது இளைஞர்.  இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருடன் அதே நிறுவனத்தில் அகன்சா என்ற 23 வயது பெண்மணி வேலை பார்த்து வந்துள்ளார்.

ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்க்கையை துவக்கி உள்ளனர். அதாவது லிவிங் டூகேதேர் முறையில் வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் ஹைதராபாத் சென்று பல நாட்கள் கழித்து அரபித் பெங்களூர் திரும்பியுள்ளார்.

சந்தேகம் டூ கொலை: 

அப்போது, அகல்சா வேறொருடன் அலைபேசியில் பேசுவதை கண்டு மிகுந்த மன அழுத்தம் கொண்ட அரபித் கடுமையான கோபத்தில் காதலியை கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் மிகவும் கூலாக இவர் இந்த பதிலை கூறியது காவலர்களை அதிர்ச்சி அடைய செய்தது.  இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Share this post with your friends