Mnadu News

டெல்லியில் கடும் பனிமூட்டம் – பொதுமக்கள் அவதி

கடுமையான பனிமூட்டம் காரணமாக டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் பல ரயில்கள் தாமதமாக வந்ததால் மக்கள் அவதி அடைந்தனர். அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக டெல்லி செல்லும் 23 ரயில்கள் ஒரு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை தாமதமாகச் சென்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு வட இந்திய மாநிலங்களில் கடுமையாக பனிப்பொழிவு நீடிக்கும் என தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இன்று பல இடங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

Share this post with your friends