Mnadu News

டெல்லியில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு :வைரலாகும் வீடியோ.

டெல்லியில் ரோகிணி நகரில் பைக்கில் முகமூடி அணிந்தபடி வந்த 2 நபர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் திடீரென துப்பாக்கி முனையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.இதனால் பதறி போன அந்த பெண் ஓடி சென்று கடை ஒன்றின் முன்னால் தஞ்சமடைந்து உள்ளார். அவரை காப்பாற்ற கடையில் இருந்தவர் வெளியே ஓடி சென்று உள்ளார். எனினும், முகமூடி கொள்ளையர்கள் கைகளில் இருந்த துப்பாக்கியை பார்த்து, மிரண்டு போன அந்த நபர் மீண்டும் கடைக்குள் ஓடினர்.இதனால், முதலில் கொள்ளையர்கள் பின்வாங்கினாலும், பின்னர் மீண்டும் கடை வாசலில் விழுந்து கிடந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறிக்க முயன்றனர்.ஆனால்,அந்த பெண்ணும் கூச்சலிட்டு, தடுத்து, போராடியும்; பலனில்லாமல் நகையை பறிகொடுத்த பரபரப்பு வீடியோ வெளிவந்து தற்போது வைரலாகி வருகிறது.

Share this post with your friends