Mnadu News

டெல்லியில் நாளை நடைபெறுகிறது பிரதமர் பதவியேற்பு விழா

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்ட புத்தகம் மீது தலைவைத்து மோடி வணங்கினார். கூட்டத்தில், கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தும், அடுத்த 5 ஆண்டுகால செயல்பாடு குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

இதைத்தொடர்ந்து, நேற்று மாலை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்த்து ஆட்சி அமைப்பதற்கான அழைப்பு கடிதத்தை பிரதமரிடம் குடியரசு தலைவர் வழங்கினார். இதற்கிடையே, பிரதமர் மோடி பதவியேற்பு விழா, குடியரசு தலைவர் மாளிகையில் நாளை மாலை நடக்க உள்ளதாக ஜனாதிபதி மாளிகை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு பிறகு, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பதவி ஏற்பவர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.

Share this post with your friends