Mnadu News

டெல்லியில் பிஎஃப்ஐ உறுப்பினர்கள் 4 பேர் கைது.

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. குறிப்பாக, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வந்தன. அதையடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்பட 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 4 பேரை டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Share this post with your friends