Mnadu News

டெல்லியில் வரும் 14ம் தேதி பொங்கல் விழா; பிரதமர் மோடி பங்கேற்பு

டெல்லியில் நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 14-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

மேலும் தமிழகத்தில் இருந்து முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டையொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நடத்திய விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends