Mnadu News

டெல்லி மக்கள் கையில் முடிவு: அமித்ஷா பேச்சு.

டெல்லியில் மாநகராட்சிக்கு உட்பட்ட தேக்கண்ட் பகுதியில் கழிவுகளில் இருந்து எரிசக்தி உற்பத்தி செய்வதற்கான ஆலையை திறந்து வைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால் தினசரி பத்திரிகைகளுக்கு அறிக்கைகளை தந்து கொண்டிருக்கிறார். பெரிய பெரிய விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார். பத்திரிகை பேட்டிகள் வளர்ச்சியை கொண்டு வரும் என அவர் நினைக்கிறார். விளம்பரங்களை வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்தி விடலாம் என்றும் நினைத்து கொண்டிருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியானது டெல்லியை ஆம் ஆத்மி நிர்பார் ஆக்க விரும்புகிறது. அதேவேளையில் நாங்கள் டெல்லியை ஆத்மநிர்பார் ஆக்க விரும்புகிறோம். விளம்பரத்திற்கான அரசியலா அல்லது வளர்ச்சிக்கான அரசியலா என டெல்லி மக்கள் முடிவு செய்ய வேண்டும். அவற்றுடன், பிரசாரத்திற்கான அரசியலா அல்லது மாற்றத்திற்கான அரசியலா என்றும் டெல்லி மக்களே முடிவு செய்ய வேண்டும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.

Share this post with your friends