Mnadu News

தக்க சமயத்தில் உதவிய முகேஷ் அம்பானி … அண்ணனுடைய பாசத்தில் உருகிய அனில் அம்பானி ;

 

‘தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் ‘ என்ற பழமொழிக்கு ஏற்றவாறு சகோதரனுக்கு ஒரு பிரச்சனை என்றால் துள்ளி கொதித்து முன் வந்து உதவும் உன்னத உறவு தான் சகோதர உறவு . இந்த பழமொழிக்கு ஏற்றபடி அரேங்கேறியுள்ள தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் அனில் அம்பானி .
உலகின் உள்ள மிகப்பெரிய கோடிஸ்வரில் ஒருவராக திகழும் அணில் அம்பானிக்கு கூட பண நெருக்கடி ஏற்பட்டது .ஸ்வீடனில் உள்ள எரிக்ஸன் நிறுவனத்தை அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனர் வாங்கினர்.ஆனால் அந்த நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்தாமல் இருந்த குற்றத்திருக்காக மார்ச் 20 தேதிக்குள் செலுத்த வேண்டும் என கெடுவிடுத்திருந்தது . இந்நிலையில் பல்வேறு தொழிலதிபர்களும் நினைத்த ஒரே விஷயம் அணில் அம்பானி இந்த கடனை எப்படி செலுத்த போகிறார் .ஆனால் யாரும் எதிர்ப்பாராத வகையில் எரிக்ஸன் நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் குழுமம் செலுத்த வேண்டிய தொகையை வட்டியும் முதலுமாக கிட்டத்தட்ட 580 கோடியை செலுத்திவிட்டது என தகவல்கள் வெளியிட்டனர் . இது குறித்து ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி கூறியதாவது தன்னுடைய அன்னான் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவிக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார் . மேலும் தனக்கொரு கஷ்டம் என வந்தவுடனே சிறிது தானாக முன்வந்து உதவிய தன்னுடைய அண்ணன் ஆனா முகேஷ் அம்பானியை பெருமிதமாக பாராட்டியுள்ளார் .

Share this post with your friends