Mnadu News

தஞ்சை அரண்மனைகளில் பாதுகாப்புத் துறை சோதனை

இலங்கையில் புனித ஞாயிறன்று  தேவலாயங்கள், நட்சத்திர தங்கும் விடுதிகளில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிரிழந்தனர். மேலும் இந்தியாவிலும் தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெறும் என்ற தகவல் வேகமாக பரவி வந்தது. பின்னர் அது வதந்தி என்று கண்டறியப்பட்டாலும் தமிழகத்தின் புராதான கோவில்கள், இடங்களில் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி தஞ்சையில் உள்ள பல்வேறு புராதான இடங்களில் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.   அதன்படி   தஞ்சை அரண்மனை, சரஸ்வதி மஹால், தர்பார் ஹால், கலைக்கூடம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வாளர் நாகராஜன், டிஎஸ்பி ரவிச்சந்திரன்  தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு செய்தனர்.

Share this post with your friends