Mnadu News

தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது மதிமுக – வைகோ

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக் கூடிய மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. ஈரோடு தொகுதி வேட்பாளராக கணேசமூர்த்தியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோவிடம் வலியுறுத்தப்பட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ இந்தச் சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

மதிமுக தனிச்சின்னத்திலேயே மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் எனத் தெரிவித்தார். மேலும் நாங்கள் கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் தந்தாலும் சரி அல்லது வேட்பு மனுத்தாக்கல் முடிந்தவுடன் தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னமானலும் சரி என்று வைகோ தெரிவித்துள்ளார்.

Share this post with your friends