திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ப்ளீச்சிங் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளாகி தீ மல மலவென பரவி ஏறிய தொடங்கியது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர நீண்ட நேரம் போராடினர். விபத்து ஏற்பட்ட போது பணியாளர்கள் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More