Mnadu News

தனி ஒருவன் 2 குறித்து அப்டேட் கொடுத்த மோகன்ராஜா

2015 ஆம் ஆண்டு மோகன்ராஜா அபாரமான இயக்கத்தில், ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமையா, நாசர், ஹரிஷ் உத்தமன், கனேஷ் வெங்கட்ராமன் போன்ற பல நடிகர்களின் நடிப்பில் உருவாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் “தனிஒருவன்”. மோகன்ராஜா, ஜெயம் ரவி இருவரின் திரை வாழ்விலும் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

குறிப்பாக, திரை கதையின் ஆழம், அரவிந்தசாமியின் மிரள வைக்கும் நடிப்பு, தம்பி ராமையாவின் இயல்பான நடிப்பு, இசை, வசனங்கள் என அனைத்தும் குழைத்து ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியது “தனி ஒருவன்”.

மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து திரை விவாதம் செய்தது இப்படம். அரவிந்தசாமியின் வஞ்சகத்தை நாயகன் ஜெயம் ரவி எப்படி கண்டறிந்து வீழ்த்துகிறான் என்பதே மீதிக் கதை.

இந்த திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், எப்போது தனி ஒருவன் பார்ட் 2 வரும் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் விரைவில் அதற்கான சூட்டிங் துவங்கும் என்றும், தற்போது ஜெயம் ரவி, மோகன்ராஜா இருவருமே வெவ்வேறு படங்களில் பிசியாக உள்ளதால் அவற்றை முடித்து விட்டு இதன் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், ஹீரோ ஜெயம் ரவி தான் என்றும், வில்லனாக நடிக்க பிரபல நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Share this post with your friends