Mnadu News

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கோடை மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், மிதமான மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் நகர் பகுதி மணவளநகர், புட்லூர், ஈக்காடு, திருப்பாச்சூர், பாண்டூர், பூண்டி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது.

இதேபோன்று, திருவண்ணாமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 30 நிமிடங்களுக்கு மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் விவசாய பெருமக்கள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணட அள்ளி ,மத்தூர், சிவம்பட்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் நிலையில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழையும் மிதமான மழை பெய்து வருகிறது.

Share this post with your friends