Mnadu News

தமிழகத்தில் நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கி அரசாணை.

சென்னை, தமிழ்நாடு முழுவதும் 3ஆயிரத்து 808 நூலகங்களை புதுப்பிக்க 84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக 2021-22ஆம் ஆண்டில் 4ஆயிரத்து 116 நூலகங்களை புதுப்பிக்க 91 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.நடப்பு ஆண்டில் 3ஆயிரத்து 808 நூலகங்களை புதுப்பிக்க 84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நூலகங்கள் 2024 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Share this post with your friends