Mnadu News

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர “மொக்கா” புயல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மரில் கரையை கடந்தது. இதையடுத்து, மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 17ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18 மற்றும் 19ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends