சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர், வாலாஜாபாத் அருகே கலைக்கல்லூரி தொடங்க அரசு ஆவண செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் பொன்முடி , உத்திரமேரூர் தொகுதியில் ஏற்கனவே கலைக் கல்லூரி உள்ளது. முதல்-அமைச்சர் எந்த தொகுதியில் கல்லூரி இல்லையோ அந்த தொகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அதன்படி 1½ ஆண்டுகளில் 31 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கல்லூரிகளில் கூடுதல் பாடப் பிரிவுகள் தொடங்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் பேராசிரியர்களுக்கு நிரந்தரப்பணி வழங்கப்பட்டுள்ளது. என்று அவர் கூறினார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More