Mnadu News

தமிழகத்தில் 60 ரயில்வே ஸ்டேஷன் அம்ருத் பாரத் திட்டத்தில் தேர்வு: தென்னக ரயில்வே தகவல்.

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார்.அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவர்,இந்தியாவின், 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, தென்னக ரயில்வேயின் கீழ் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 4 கோட்டங்களிலும் தலா, 15 ரயில்வே ஸ்டேஷன்கள் என மொத்தம், 60 ஸ்டேஷன்கள், அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன, என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends