Mnadu News

தமிழக சட்டப்பேரவை நாளைக்கு ஒத்திவைப்பு.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடியது. கூட்டம் தொடங்கியதும் பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா,மற்றும் உத்திரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் உள்பட 7 பேர் மறைவுக்கு பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, கோவை தங்கம் உள்ளிட்ட 10 முன்னாள் எம்எல்ஏக்களின் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேரவைக் கூட்டத்தை நாளைக்கு ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். இபிஎஸ் அணி புறக்கணித்த நிலையில் இன்று பேரவைக்கு ஓபிஎஸ் அணியினர் வந்தனர். தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து நீடிக்கிறார். எடப்பாடி பழனிசாமி பரிந்துரைத்த ஆர்.பி.உதயகுமார் பெயர் எதர்க்கட்சி துணைத் தலைவராக அலுவல் ஆய்வு குழுவில் சேர்க்கப்படவில்லை.

Share this post with your friends