Mnadu News

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பேட்டி

தென்காசி மாவட்டம் குண்டாறு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் கருத்தரங்கு கூட்டம் வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக 63% மக்கள் எதிராக வாக்கு செலுத்தி வருகின்றனர். வரக்கூடிய தேர்தல்களில் அவர்களை ஒன்றிணைப்பதை காங்கிரஸ் கட்சியில் கடமையாக உள்ளது.

மேலும் ஊழலைப் பற்றி பேசுவதற்கு பாஜகவிற்கு எந்த தகுதியும் இல்லை எனவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது இல்லை எனவும் சனாதனம் கூறக்கூடிய மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாக தெரிவித்தார்.

Share this post with your friends