Mnadu News

தமிழ்நாடு முழுவதும் வேட்பு மனு தாக்கல் தீவிரம் அனல் பறக்கும் தேர்தல் களம்

தமிழ்நாட்டில் முழுவதும் இன்று வேட்பு மனு தாக்கல் என்பதால் பல்வேறு கட்சியினர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தவண்ணம் வருகின்றனர். அந்த வகையில் அதிமுக- வின் நாடாளுமன்ற தென்சென்னை தொகுதியின் வேட்பாளரான ஜெயவர்தன் தனது கட்சியினரோடும், ஏராளமான தொண்டர்களுடனும் ஆரவாரமாக அவரது வேட்பு மனுவை அடையாறில் தாக்கல் செய்தார் .

 

அடுத்தபடியாக திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியரின் முன்பு தனது வேட்பு மனு தாக்கல் செய்தார் . வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

 

Share this post with your friends