பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஷோபா கரந்த்லாஜே,மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டும் அல்ல,அவர் அரசியலில் மூத்த தலைவர் ஆவார். அவர் தனது பேச்சின் மூலம் உலகிற்கு என்ன சொல்ல விரும்புகிறார்? என்று புரியவில்லை.அதே நேரம், நரேந்திர மோடி நம் நாட்டின் பிரதமர் ஆவர். அவரை உலகம் முழுவதும் உள்ள நாடுகள் மதிக்கிறது. ஆனால், பிரதமருரை விமர்சிக்க இதுபோன்ற வார்த்தையை பயன்படுத்துவது என்பது காங்கிரசின் தரம் தாழ்ந்து தன்மையை காட்டுகிறது. இத்தகைய பேச்சுக்கு கார்கே நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More