தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில், தருவைகுளம் காவல் நிலைய எஸ்ஐ முத்துமாலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை படு ஜோராக நடை பெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையோரம் நின்று கொண்டிருந்த 5 பேர் கும்பலை போலீசார் மடக்கி பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/drug-1.jpg)
இதில் அவர்கள் தூத்துக்குடி ஆவுடையார்புரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், நெல்லை திருக்குறுங்குடி வடக்கு தெருவை சேர்ந்த சுந்தர், செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, விக்டர் கோட்டை ஆகியோர் தான் என்பது தெரியவந்தது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/IMG_20230709_115311.jpg)
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அந்த கும்பலிடமிருந்து 2கிலோ கஞ்சா பண்டலையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் 5 பேரையும் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தருவைகுள கடற்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/drug-2.jpg)