Mnadu News

தர்மபுரி அரசினர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற இரத்ததான முகாம்

தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் குருதி கொடை விழா’ கல்லூரி முதல்வர் முனைவர் கிள்ளிவளவன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த முகாமில் இருநூறுக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் இரத்த தானம் வழங்கினர். இதில் கலந்துகொண்டு இரத்த தானம் செய்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமை செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரசேகரன் முருகன் ராதிகா ஆகியோர் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends