Mnadu News

தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: கேஜரிவால் குற்றச்சாட்டு.

டெல்லியில் உள்ள சாகேத் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதில் பெண் ஒருவர் காயமடைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக முதல் அமைச்சர் கேஜரிவால் பதிவிட்டுள்ள ட்வீட்டர் செய்தியில்,டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.பிறர் பணிக்கு இடையூறு ஏற்படுத்தாமல், ஒவ்வொரு விஷயத்திலும் கேவலமான அரசியலில் ஈடுபடாமல் ஒவ்வொருவரும் அவரவர் பணியில் கவனம் செலுத்த வேண்டும்.அதை சரியாக செய்யமுடியாவிட்டால் பதவி விலகுங்கள். மற்றவர்களைச் செய்ய விடுங்கள். மக்களின் பாதுகாப்பை வாய்ப்பாக விட்டுவிட முடியாது என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

Share this post with your friends