Mnadu News

தலைமை நீதிபதி நியமனத்திற்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி.

உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் கடந்த 9-ஆம் தேதி பதவியேற்றார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமானம் செய்துவைத்தார். இதற்கிடையில் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சஞ்சீவ் குமார் திவாரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. டி.ஒய்.சந்திரசூடிட நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது என அவர் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டனர். அதோடு, இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்று கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளனர்.

Share this post with your friends